ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் பகுதியை  சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனது காதலனுடன் வீட்டை விட்டு கிளம்பியுள்ளார். இந்த காதல் ஜோடி அஜ்மரில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு ஜோத்பூர் சென்றடைந்துள்ளனர். அங்கு தங்குவதற்கு அரை எடுக்க முயற்சித்த போது அங்கு வேலை பார்க்கும் சுரேஷ் ஜாட் என்பவர் சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் இருவரும் அங்கிருந்து வேறொரு இடத்திற்கு சென்றனர். அங்கு சமந்தர், தரம்பால் சிங், பட்டம் சிங் என்ற மூன்று இளைஞர்களை சந்தித்துள்ளனர்.

அவர்கள் இந்த காதல் ஜோடிக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து நட்புடன் பழகி உள்ளனர். இதனால் தங்களைப் பற்றிய விபரங்களை காதல் ஜோடி அந்த இளைஞர்களிடம் கூறியுள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த அந்த மூன்று இளைஞர்களும் இந்த ஜோடியை ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக கூறி பழைய ஹாக்கி மைதானத்திற்கு அழைத்து சென்று காதலனை சரமாரியாக தாக்கிவிட்டு அவரது கண் முன்னே சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

காலையில் நடை பயிற்சி மேற்கொள்ள அந்த பழைய ஹாக்கி மைதானத்திற்கு வந்தவர்களை பார்த்ததும் மூன்று இளைஞர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் காதலன் நடை பயிற்சிக்கு வந்த ஒருவரிடம் உதவி கேட்க அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் தடையியல் நிபுணர் உதவியுடன் மூன்று இளைஞர்களையும் சில மணி நேரங்களிலையே கைது செய்தனர்.