தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்களை போட்டி தேர்வின்றி பணி நியமனம் செய்வதில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை போட்டி தேர்வு இன்றி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வலியுறுத்தி கடந்த 2020 ஆம் ஆண்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய போது அதற்கு ஆதரவு அளித்தவர் முதல்வர் ஸ்டாலின்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தவர் அவர். ஆட்சியில் இருக்கும் போது ஒரு விதமாகவும் ஆட்சியில் இல்லாத போது மற்றொரு விதமாகவும் திமுக அரசு நடக்கிறது என்று கூறியுள்ளார்.