பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த போது பல்வேறு நாட்டு தலைவர்கள் வழங்கிய பரிசுகளை விற்று சொத்து சேர்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மூன்று வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதை எடுத்து இம்ரான்கான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினரை சந்திக்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று அட்டாக் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.