பொது இடங்களில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு இழைக்கப்படும் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோவில் இந்திய நபர் ஒருவர், கடற்கரையில் இருந்த வெளிநாட்டுப் பெண்களின் அனுமதியின்றி அவர்களைத் தொந்தரவு செய்வது பதிவாகியுள்ளது.
‼️The obsession with white skin..
I have travelled to 100s of beaches, but never seen such awkward behaviour where tourists face harassment like this.
Goa has become a symbol of insecurity,with rowdies roaming freely.
Cops Missing.🤦
Shame on BJP.pic.twitter.com/NVBCDl3CZz
— Manu🇮🇳🇮🇳 (@mshahi0024) February 7, 2026
அந்தப் பெண்களுக்கு விருப்பம் இல்லாதபோதும், அவர்களைத் தன் கையைப் பிடித்துச் சுற்றச் சொல்லி வற்புறுத்துவதும், அதைச் சமூக வலைதளங்களுக்காக வீடியோ எடுப்பதும் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. “இது பொழுதுபோக்கு அல்ல, அநாகரிகமான செயல்” என்று இணையவாசிகள் பலரும் அந்த நபருக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
This is disturbing, not “fun content.”
– A man approaching foreign women on a public beach
– Filming without clear consent
– Turning strangers into social-media props
– Crossing personal and cultural boundariesRespect is the bare minimum. pic.twitter.com/FlsGuLxwOm
— Divya Gandotra Tandon (@divya_gandotra) February 7, 2026
இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் குறித்த அச்சத்தை மீண்டும் ஒருமுறை கிளப்பியுள்ளன. சமீபத்தில் கோவாவிலும் இது போன்ற ஒரு கும்பல் வெளிநாட்டுப் பெண்ணைச் சூழ்ந்துகொண்டு அச்சுறுத்தியது குறிப்பிடத்தக்கது. “சுற்றுலாப் பயணிகளைச் சமூக வலைதளப் பொருட்களாக (Props) நினைப்பது இந்திய கலாச்சாரத்திற்கே அவமானம்” என்றும், “இது போன்ற நபர்களால் சர்வதேச அளவில் இந்தியாவின் பிம்பம் சிதைகிறது” என்றும் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.
“ i am going to beat your a** up”
Female tourists at beach in Mumbai were being forcefully touched inappropriately by a few men inspite of requesting to leave them alone.
At one point a female tourist threatened to retaliate and the molester backed off. pic.twitter.com/zyPcZAo3a5— TA_backup_2nd (@TA_backup_2nd) December 19, 2025
பொது இடங்களில் மற்றவர்களின் எல்லைகளை மதிப்பதே குறைந்தபட்ச மரியாதை என்பதை உணர்த்தும் வகையில், சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
