நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று முதல் மின்சார இருசக்கர வாகனங்களின் கட்டணம் கணிசமாக உயர உள்ளது. தற்போது வரை 1 KWhவாகன திறனுக்கு 15 ஆயிரம் ரூபாய் மானியம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்று முதல் அது பத்தாயிரம் ரூபாயாக குறைக்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று முதல் மின்சார வாகனங்களின் விலை 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.