திருப்பதி மற்றும் காட்பாடி சிறப்பு ரயில் பராமரிப்பு பணி காரணமாக ஆகஸ்ட் 9 இன்று முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதியில் இருந்து தினந்தோறும் காலை 10.55 மணிக்கு காட்பாடி செல்லும் சிறப்பு ரயில் மறு மார்க்கமாக காட்பாடியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு திருப்பதி செல்லும் சிறப்பு ரயில் ஆகஸ்டு 9 முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை விழுப்புரத்திலிருந்து அதிகாலை 5.30 மணிக்கு திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி சிறப்பு ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும் எனவும் மருமார்கமாக இந்த ரயில் வழக்கம் போல திருப்பதிக்கு பதில் மாலை 4.40 மணிக்கு காட்பாடியில் இருந்து புறப்பட்டு வழக்கம் போல விழுப்புரம் சென்றடையும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.