சென்னையில் தாமத கட்டணங்களுக்கான மேல் வரி மாதத்திற்கு 1.25 சதவீதத்திலிருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று ஜூலை 1ஆம் தேதி முதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோருக்கு மேல் வரி ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை இணைய தளம், யு பி ஐ, கியூ ஆர் குறியீடு, கடன் மற்றும் பற்று அட்டைகள், வங்கி பரிவர்த்தனைகள் என பிற கட்டண முறைகளை பயன்படுத்தி செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.