திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வியாழக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வருகின்ற ஜூலை 2 ஆம் தேதி முதல் செப்டம்பர் 24ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படும்.

மறு மார்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும் நிலையில் ஜூலை 3 ஆம் தேதி முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை திங்கட்கிழமை தோறும் இயக்கப்படும். இதனைப் போலவே ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மற்றும் கோவை இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் ஜூலை 5, 12, 19,26ஆகிய தேதிகளில் ஈரோடு வரை ஏக்கப்படும் எனவும் மறுமார்க்கமாக இந்த ரயில் ஈரோட்டில் இருந்து சம்பல்பூருக்கு ஜூலை 7,14,21,28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.