தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி நவ.2022ல் தொடங்கி, நடந்து வருகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கு ஜனவரி 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட பின் ஒருசிலர் இணைக்காததால்பிப்ரவரி 15 ஆம் தேதி(இன்று ) வரை நீட்டிக்கப்பட்டது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்றே (பிப்.15) கடைசி நாளாகும்.  இந்நிலையில், ஆதாரை இணைக்காதவர்கள் இன்று மாலைக்குள் மின் இணைப்புடன் இணைக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுவரை 2.59 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 2.67 கோடி மின் இணைப்புகளில் இது 97.07% ஆகும். இன்று கடைசி நாள் என்பதால், எஞ்சியவர்கள் உடனே ஆதாரை இணைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.