திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று  7 மணி நேரத்திற்கு தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேவஸ்தானம் கூறியுள்ளது.

வரும் 17ம் தேதி ஏழுமலையான் கோவிலில் ஆனி வார ஆஸ்தானம் நடைபெறுகிறது. இதற்காக, இன்று கோவிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். அதிகாலை 4.30 முதல் 11.30 மணி வரை இப்பணிகள் நடைபெறுவதால், இந்த 7 மணி நேரத்திற்கு தரிசனம் செய்ய அனுமதி