இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான டாக்டர். கே கஸ்தூரி ரங்கனுக்கு (83) மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் அவர் அழைத்து வரப்பட்டார். நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக கருதப்படும் கஸ்தூரிரங்கன், தேசிய கல்வி கொள்கை வரைவு குழு தலைவராக இருந்துள்ளார்.

இந்நிலையில் இவர், இலங்கை கொழும்புவிற்கு சென்றிருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, ​​அவரை விமானம் மூலம் பெங்களூருக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.