தமிழ்நாட்டில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் நாளை 24வது நிறுவன தினத்தை கொண்டாடுகிறது. இதனால் இன்றும் நாளையும் விமான டிக்கெட் முன் பதிவு செய்தவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இன்று  மற்றும் நாளை  விமான டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு சேவை கட்டணம் கிடையாது என்று தெரிவித்துள்ளது. இது குறித்து ஐஆர்சிடிசி வெளியிட்ட அறிக்கையில், உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் 24 வது நிறுவனத்தை கொண்டாடுகிறது. அது மட்டுமில்லாமல் சர்வதேச சுற்றுலா தினமும் கொண்டாடப்பட உள்ளது.

இதனால் பயணிகளுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு  கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த சலுகை இன்றும் நாளையும் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக பரிவர்த்தனை செய்தாலும் 2000 ரூபாய் வரை சேமிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சலுகை பெற விருப்பமுள்ளவர்கள் என்ற www.air.irctc.co.in இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். மேலும் ஒவ்வொரு விமான டிக்கெட் 50 லட்சம் வரை பயண காப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.