தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் பசுபதி கோயில் பகுதிகளில் என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உயர்கல்வியை மாணவர்களுக்கு சொல்லிக்குடுக்க வேண்டிய அமைச்சர் சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு அமைச்சர் சிறையில் இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், திமுகவில் உள்ள 11 அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றசாட்டு உள்ளது. இவர்களில் 3 அமைச்சர்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் சிறைக்கு சென்று விடுவார்கள் என அவர் கூறியுள்ளார்.