கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் கடற்கரை சாலையில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “ஹேப்பி ஸ்ட்ரீட்” நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறும்.

இந்நிலையில் இளைஞர்கள், பள்ளி- கல்லூரி மாணவ மாணவிகள், சமூக நல அமைப்பினர், தன்னார்வலர்கள் என அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு களிக்கலாம். கடலூர் மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற இணைந்து செயலாற்றலாம் என கூறியுள்ளார்.