திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தரேவு கிராமத்தில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமானார். இந்நிலையில் சிறுவன், அவரது தந்தை, உறவினர்கள் என 5 பேர் அந்த கருவை கலைக்க முயற்சி செய்தனர். ஆனால் கருவை கலைக்க இயலவில்லை.

இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என மாணவியை 5 பேரும் மிரட்டி உள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் ஐந்து பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதில் போலீசார் சிறுவனை மட்டும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.