புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்ட அம்மாநில முதல்வர் ரங்கசாமி, நடப்பு ஆண்டில் மொத்தம் 92.67% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்தார். இத்தேர்ச்சி விகிதம் கடந்த வருடத்தை விட 3.46% குறைவு. அரசு பள்ளிகளை பொறுத்தவரையிலும் 85.38% மாணவர்களும் புதுச்சேரி, காரைக்காலில் 56 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

+2 தேர்வு முடிவுகள் தொடர்பான அறிவிப்பை அடுத்து சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறித்த செய்தியையும் ரங்கசாமி அறிவித்தார். அதாவது வரும் கல்வியாண்டு முதல் 1-9 ஆம் வகுப்பு வரை மற்றும் 11ம் வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகும் எனவும் அதில் தமிழ் மொழிப்பாடமும் விருப்ப பாடமாக இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.