ராஜஸ்தானின் ஹனுமன்கர் அருகில் இந்திய விமானப் படையின் MiG-21 போர் விமானமானது விபத்துக்குள்ளானது. ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தின் சூரத்கர் விமானப் படை நிலையத்தில் இன்று மே 8 விமானம் புறப்பட்ட நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திலிருந்து விமானி பத்திரமாக வெளியேறிய சூழலில், ஒரு வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கியதால் 3 சிவிலியன்கள் உயிரிழந்ததை உள்ளூர் காவல்துறையினர் உறுதிசெய்துள்ளனர். விமானி பாதுகாப்பாக உள்ளதாகவும், மீட்பு பணிக்காக ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இவ்விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த நிலையில், 3 பேர் காயமடைந்துள்ளனர். இதனிடையே விமானத்திலிருந்து வெளியேறிய விமானி சூரத்கர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.