விசாரணைக்கு அழைத்து வரும் நபர்களை எக்காரணம் கொண்டும் துன்புறுத்தக் கூடாது என்று காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி என்பவர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அழைத்து தன்னை துன்புறுத்தியதாக வழக்கு தொடர்ந்தார். இந்த மனுசாரணை நேற்று அமர்வுக்கு வந்த நிலையில், காவல்துறை விசாரணையில் உயர் நீதிமன்றம் தலையிடுவதில்லை.

ஆனால் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு காவல்துறையினர் விசாரணைக்காக வரும் நபர்களை துன்புறுத்தக்கூடாது. அப்படி நடந்ததாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு ஏதாவது தகவல் வந்தால் நீதிமன்றம் கைகட்டி கொண்டு வேடிக்கை பார்க்காது. விசாரணை நடைமுறைகள் காவல் நிலையத்தில் உள்ள பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.