பெங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு மே 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி பெங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்றும் நாளையும் சிறப்பு முறையில் இயக்கப்படுகிறது. மறுமார்கமாக சென்னை எழும்பூரில் இருந்து பெங்களூருக்கு இன்றும் நாளையும் மாலை 3.50 மணிக்கு இந்த ரயில் இயக்கப்படும்.

இந்த ரயில் ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டி, 7 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 7பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உள்ளன. மேலும் இந்த ரயில் ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் வழியாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.