தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு செலுத்த திட்டமிட்ட நிலையில் இந்த மாதம் தீபாவளி ஒட்டி முன்கூட்டியே வழங்கப்பட்டது.

இது இல்லத்தரசிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனை மேலும் பயனுள்ளதாக மாற்றும் விதமாக மாத தொடக்கத்திலேயே குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து குடும்ப தலைவிகளுக்கு மாத தொடக்கத்தில் ஆயிரம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.