தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கஞ்சா நடமாட்டம் குறையவில்லை என குற்றம் சாட்டினார். இதற்கு சட்டப்பேரவையில் பதில் அளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் போதை பொருள்களை அடியோடு உதித்த இளைஞர்களின் எதிர்காலத்தை காப்போம். அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் இரண்டு மடங்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் காவல்துறையில் சில கருப்பு ஆடுகள் உள்ளது. இதை களை எடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.