படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் இன்று (ஏப்ரல் 21) அன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் காலை நடைபெறவுள்ளது.

காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது