கோவை கந்தே கவுண்டன் சாவடி முதல் உப்பிலிபாளையம் வழியாக இயக்கப்படும் தனியார் பேருந்து அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பேருந்தில் எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்க ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணமாக நிர்ணயித்துள்ளது. இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அந்த நிறுவனத்தின் பேருந்துகள் தான் பள்ளி நேரத்தில் இயக்கப்படுகின்றன.

அதனால் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த நிர்வாகம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவையில் அரசு பேருந்துகளுக்கு இணையாக தனியார் பேருந்துகளும் சலுகைகளை தற்போது அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைப் போலவே முதியோர்கள், பெண்கள் மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம் என்றும் தனியார் பேருந்துகள் அறிவித்துள்ளன.