இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. அதன் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது.

அதன் ஒரு பகுதியாக சீனா உட்பட பிற நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு சற்று முன் அறிவித்துள்ளது.