கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு என்ஐடி அமைந்துள்ளது. காதலர் தினம் வருவதை முன்னிட்டு என்ஐடி வளாகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக என்ஐடி அதிகாரிகள் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் கல்லூரி வளாகத்துக்குள் அன்பை வெளிப்படுத்தும் விதமான எந்த ஒரு நடவடிக்கைகளும் இருக்கக் கூடாது.

கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பிற மாணவர்கள் முகம் சுளிக்கும் வகையிலான நடத்தைகள் இருக்கக் கூடாது. உங்கள் நடத்தைகளால் அவர்கள் எரிச்சல் அடையக் கூடாது. மாணவர்கள் பொதுவெளியில் அன்பை வெளிப்படுத்துவது கல்வி சூழலை பாதிக்கும். இந்த சுற்றறிக்கையை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான சுற்றறிக்கை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.