உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள டியோரியா மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் அப்துல் அஹத் என்பவர் கிரிக்கெட் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் இளம் வீரர்களுக்கு ரவீந்திர கிஷோர் சாகி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து பயிற்சி கொடுத்து வருகிறார். இந்நிலையில் பயிற்சியாளர் அப்துல் ஒரு மேஜையில் படித்திருக்கும் போது அவருக்கு இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ நேற்றைய தினம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அப்துல் ஒரு இளம் கிரிக்கெட் வீரரை கட்டாயப்படுத்தி தனக்கு மசாஜ் செய்ய வைத்துள்ளார். இதன் காரணமாக அப்துல் அஹத்தை பயிற்சியாளர் பணியில் இருந்து நீக்கி மாநில விளையாட்டு துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.