மருந்து நிறுவனங்கள் மேற்கொள்ளும் சில நியாயமற்ற நடைமுறைகளை தடுக்கும் விதமாக மருந்து சந்தைப்படுத்தலுக்கான புதிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் மருந்து நிறுவனங்கள், சுகாதார நிபுணர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு எவ்வித இலவச பரிசு மற்றும் மாதிரிகள் வழங்க கூடாது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயண வசதி, தங்கும் விடுதி மற்றும் விலை உயர்ந்த உணவு போன்ற விருந்தோம்பல் வழங்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.