இந்தியாவில் திருமணமான ஆண்களில் 60% பேர், திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருக்க ஆசைப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. டேட்டிங் செயலியான க்ளீடன் (Gleedan) நிறுவனம் சமீபத்தில் 25-50 வயதான திருமணமான ஆண்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்படி, அந்த ஆய்வில் 60% பேர் ஆண்கள் மற்ற பெண்களுடன் உடலுறவில் இருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதாவது கலாச்சாரம் பின்பற்றப்படும், காதலும் அன்பும் முக்கியம் எனக் கருதப்படும் இந்தியாவில், இப்படியொரு தகவல் வெளியாகி அதிர்ச்சி அளிக்கிறது.