முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், புனே மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல் பெண் குடியரசுத் தலைவராக 2007 2012 வரை பதவி வகித்த அவர், ஓய்வுக்கு பிறகு, புனேயில் வசித்து வருகிறார். காய்ச்சல், நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.