சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த சின்ன கவுண்டனூர் நான்கு ரோடு பகுதியில் அதிகாலை சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் ஆம்னி வேன் மோதியதில் வேனில் பயணம் செய்த ஒரு பெண் குழந்தை உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்த விபத்தை தொடர்ந்து இரவு நேரங்களில் லாரி உள்ளிட்ட வாகனங்களை சாலையோரம் நிறுத்தக்கூடாது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இரவு நேரங்களில் லாரி உள்ளிட்ட பல கனரக வாகனங்களை ஓட்டுநர்கள் சாலையோரங்களில் நிறுத்தி வைப்பதால் மிக மோசமான விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் இரவு நேரங்களில் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.