தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு சந்தை என்ற பிரத்தியேக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வகையான அத்தியாவசிய பொருட்களை ஆன்லைனில் வாங்கும் விதமாக coop bazaar என்ற செயலியை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செயலியின் பயன்பாட்டை இன்று தொடங்கி வைத்தார்.

இந்த செயலியில் ஆர்டர் செய்தால் பொருட்கள் வீடு தேடி வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கூட்டுறவு சந்தை தயாரிப்பு பொருட்களை இனி இந்த செயலி மூலமாக மக்கள் வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.