விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி என்ற ரகுராமன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என ஈ.பி.எஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.. கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் நீக்கமே செய்யப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,  கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் திரு முரளி என்ற ரகுராமன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/AIADMKOfficial/status/1676841686364991493