இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. ஆதார் அட்டையில் மாற்றங்கள் செய்ய விரும்புவோர் சில நேரங்களில் நேரடியாக ஆதார் மையங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருந்தது. சிலவற்றை ஆன்லைனில் மட்டுமே மாற்ற முடியும் என்ற நிலையும் இருந்தது. இனி எந்த வித திருத்தத்தையும் ஆன்லைன் மூலமாகவோ நேரடியாகவோ செய்து கொள்ளலாம் என்று UIDAI தெரிவித்துள்ளது. ஆதாரை புதுப்பிக்க கூட இனி நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.