தமிழகத்தில் ஆட்சியில் தொடர்வதற்கான உரிமையை திமுக அரசு இழந்து உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ள பதிவில், சவர்மா சாப்பிட்ட சிறுமி கலையரசி உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். மனித உயிர்கள் மீது அக்கறை இன்றி செயல்படும் இந்த அரசை வன்மையாக கண்டிப்பதுடன் இந்த அரசு இனியும் ஆட்சியில் தொடர்வதற்கான உரிமையை இழந்துள்ளது என்று இபிஎஸ் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.