இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உணவு பாதுகாப்பதை  வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் தகுதியற்ற ரேஷன் கார்டுதாரர்களுக்கு  எதிராக அரசு சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

இதன் கீழ் ஹரியானா அரசு கடந்த காலங்களில் ஒன்பது லட்சம் ரேஷன் கார்டுகளை ரத்து செய்து இருக்கிறது. அதேசமயம் 12 லட்சம் புதிய ரேஷன் கார்டுகளும் வழங்கப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் தகவல் தெரிவித்துள்ளார். ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்ட மக்களில் மூன்று லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள். அதேபோல் சுமார் 80 ஆயிரம் பேர் அரசு ஊழியர்கள். பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் கீழ் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இது தவிர பல மாநில அரசுகளும் ஏழைகளுக்கு ரேஷன் வழங்கி வருகிறது. ரேஷன் வழங்க கார்டுதாரர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் தகுதி இல்லாதவர்கள் கூட ரேசனை பயன்படுத்திக் கொள்வதாக கடந்த சில தினங்களாக செய்திகள் எழுந்துள்ள நிலையில் தற்போது அரசு தகுதியற்றவர்களின் கார்டுகளை நீக்க தொடங்கியுள்ளது. மேலும் அவர்களின் கார்டுகள்  ரத்து செய்யபட்டும் வருகிறது.