சென்னையில் இருந்து இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி சனிக்கிழமை புறப்படும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம் உதானா பணிமனையில் மறு சீரமைப்பு பணி நடைபெறுவதால் இன்று சென்னையிலிருந்து புறப்படும் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது.

அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று காலை 10.10 மணிக்கு புறப்படும் அகமதாபாத் நவஜீவன் விரைவு ரயில் புஜாவல், அகோலா, போபல், சந்த் ஹித்ரம் நகர், மக்ஸி, நாகடா, சாயாபுரி வழியாக இயக்கப்படும். அதனைப் போலவே சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 3.30 மணிக்கு புறப்படும் ஜோத்பூர் அதிவிரைவு ரயில் மேற்கண்ட வழித்தடங்களில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.