மருதுபாண்டியர் குருபூஜை வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தின் ஏழு வட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் சிவகங்கை, திருபுவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர் , இளையான்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய வட்டங்களில் கல்வி நிலையங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காரைக்குடி மற்றும் சிங்கம் புணரியில் வழக்கம் போல பள்ளி கல்லூரிகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.