ஹரியானா மாநிலத்தில் உள்ள நூ என்ற மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வன்முறை சம்பவமானது நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து நூ மற்றும் மோர்னி பகுதியில் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி ஆசிரியர் இடமாற்றக் கொள்கை 2023 அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த புதிய கொள்கையானது மாணவர்களுடைய கல்வி நலனை பாதுகாப்பதோடு ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அடிப்படையில் சரியான சம்பளம் வழங்குவது போன்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் அமைச்சரவை 5 வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட கொள்கையை ரத்து செய்து, வரைவு ஆசிரியர் இடமாற்ற கொள்கைக்கு 2023 ஒப்புதல் அளித்துள்ளது.