தமிழக அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தொடர்ந்து கற்போம் எனும் திட்டத்தின் கீழ், மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் மூலம் இந்த சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் மாணவர்கள் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்று தங்கள் கல்வியைத் தொடர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.