மாலத்தீவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் எட்டாவது அதிபராக முகமது முய்சு வெற்றி பெற்று நேற்று முன்தினம் பதவி ஏற்றுள்ளார். அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் வெற்றி பெற்றால் இந்திய ராணுவத்தை மாலத்தீவில் இருந்து வெளியேற்றுவதாக வாக்குறுதி கொடுத்திருந்தார். இந்நிலையில் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட மத்திய மந்திரி கிரண் ரிஜிஜுவுடன் முகமது முய்சு இந்திய ராணுவத்தை மாலத்தீவில் இருந்து வெளியேற்றுமாறு முறைப்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தனது ராணுவத்தை இந்தியா மாலத்தீவில் இருந்து திரும்பப் பெறுமாறு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. முகமது முய்சு சீனா ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.