இந்திய சர்க்கஸ் உலகின் தந்தை என்று போற்றப்படும் ‘ஜெமினி’ சங்கரன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 99. ஜெமினி சர்க்கஸ் மற்றும் ஜம்போ சர்க்கஸ் என்ற இரண்டு பெரிய சர்க்கஸ் நிறுவனங்களை தொடங்கியவர் சங்கரன்தான். இந்திய சர்க்கஸ் பெடரேஷனின் தலைவராகவும் சங்கரன் இருந்துள்ளார். கேரளாவின் கன்னூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சங்கரன் காலமானார்.