இந்தியாவில் உள்ள 26 அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள அறிவியல் மையத்தின் அலுவலகத்தின் மின்னஞ்சலுக்கு 26 அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து  26 மையங்களில் ஒரு மையமான நெல்லையில் இருக்கக்கூடிய அந்த மையத்தில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

கொல்கத்தாவில் உள்ள அறிவியல் மைத்தின் அலுவலகத்திற்கு ஒரு மெயில் வந்துள்ளது. அதில் 26 அறிவியல் மையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு மையங்களில் சோதனையானது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில்  மத்திய அரசின் மாவட்ட அறிவியல் மையம் திருநெல்வேலியில் மட்டுமே இருக்கிறது.

இந்த திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் துணை ஆய்வாளர் குணசேகரன் அவர்கள் தலைமையில் 6 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொல்கத்தாவில் உள்ள தலைமையகத்தில் உள்ள அலுவலர்கள் அளித்த  தகவலின் அடிப்படையில் இது போன்ற சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.