இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் ஆதார் குறித்த விவரங்களை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆதார் மோசடிகள் அதிகரித்து வருவதால் இந்த பிரச்சனைகளை சரி செய்ய UIDAI மாஸ்க்டு ஆதார் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

தனிநபர்களின் தனி உரிமையை பாதுகாப்பதற்காக ஆதார் எண்களை மறைக்கும் வகையிலான ஆதார் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஆதார் அம்சத்திற்கு ஒருவர் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ என்ற பக்கத்தை பார்த்து முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.