மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிய முதல் கப்பல் இந்தியா நோக்கி வருவது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட ‘பிங் ஷுன்’ என்ற அஃப்ராமாக்ஸ் வகை கப்பல், ஈரானின் கார்க் தீவிலிருந்து சுமார் 6 லட்சம் பேரல் கச்சா எண்ணெயுடன் இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள வதினார். துறைமுகத்தை நோக்கிச் சமிக்ஞை செய்துள்ளதாகக் கப்பல் கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019 மே மாதம் அமெரிக்கத் தடைகளால் நிறுத்தப்பட்ட இந்த வர்த்தகம், தற்போது நிலவும் போர்ச் சூழல் மற்றும் உயர்ந்த எண்ணெய் விலையைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வழங்கிய தற்காலிக வரி விலக்கைத் தொடர்ந்து மீண்டும் சாத்தியமாகியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள இக்கட்டான சூழலில், தள்ளுபடி விலையில் கிடைக்கும் இந்த ஈரானிய எண்ணெய் இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
