இன்றைய காலத்தில் சமூக ஊடகங்கள் இல்லாதவர்களைப் பார்ப்பது அரிது. இளைஞர்கள் மட்டுமல்ல, முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் ஏதோ ஒரு சமூக ஊடக தளத்தில் இருக்கிறார்கள்.

நீங்களும் தினமும் சமூக ஊடகங்களில் ஸ்க்ரோல் செய்பவராக இருந்தால், அங்கு பலவிதமான வீடியோக்கள் பதிவாகி, சில வைரல் ஆவதைப் பார்த்திருப்பீர்கள்.

தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, இதைப் பார்த்தால், அஜாக்கிரதையின் விளைவு என்னவாக இருக்கும் என்பது தெளிவாகும். இந்த வீடியோவில், ஒரு இளைஞன் நகரும் ரயிலில் ஆபத்தான ஸ்டண்ட் செய்கிறார்.  அவர் ரயில் பெட்டியின் உள்ளே இல்லை, மாறாக இரண்டு பெட்டிகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் நின்று, ஒரு கையால் ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொண்டு, மறு கையை காற்றில் உயர்த்தி ஸ்டண்ட் செய்கிறார்.

அப்போது அவர்  “ஹர ஹர மஹாதேவ்” என்று கூச்சலிடுகிறார். திடீரென, அவரது முகம் ஒரு மின்கம்பத்துடன் மோதுகிறது. ரயிலின் வேகம் குறைவாக இருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை, இல்லையெனில் அவரது உயிருக்கே ஆபத்தாகியிருக்கும்.

இந்த வீடியோவை X தளத்தில் @Rawat_1199 என்ற கணக்கில் “எவ்வளவு அஜாக்கிரதையாக இருக்கிறார்கள் மக்கள்” என்ற தலைப்புடன் பதிவேற்றப்பட்டு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். பயனர்கள், “இனி இவன் இப்படி செய்யமாட்டான்”, “தலையில் அடிபடவில்லை, அதிர்ஷ்டம்” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.