நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது பட்ஜெட்டா?.. இது ஒரு மளிகை கடைக்காரரின் பில் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி விமர்சித்துள்ளார். இது பற்றி அவரது டுவிட்டர் பதிவில், ஒரு முறையான பட்ஜெட் என்பது அதன் குறிக்கோள்கள் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். GDP  வளர்ச்சி விகிதம் என்றால் முதலீட்டின் நிலை மற்றும் வருவாய் விகிதத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.