இந்தியாவில் பலர் திருமணத்திற்கு முன் வித்தியாசமான ப்ரீ – வெட்டிங் போட்டோஷூட் எடுப்பது இன்றைய டிரெண்டாகி வருகிறது. அதேபோல கோவாவில், ஒரு இளம் பெண், அழகாக அலங்கரிக்கப்பட்டு கனமான உடை அணிந்து போட்டோஷூட் எடுப்பதற்காக கடலில் குதித்தார். பின்னர் மேலே வரும் போது உடை தனியாக கழன்றூ சென்றது. இந்நிலையில், அங்கிருந்த சிலர் அப்பெண்ணை காப்பாற்றினர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கடும் வைரலாகி வருகிறது. இதுபோன்ற செயல்களைச் செய்து யாரும்  உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.