உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, அந்நிய படையெடுப்பின்போது ஒரு வீரன் கொல்லப்பட்டால், அவரின் மனைவியை அவர்கள் பரிசுப்பொருளாக எடுத்துச்சென்றனர்.

அதனால் அந்த பெண் தன் கற்பை காப்பாற்றிக்கொள்வதற்காக தொடங்கப்பட்ட நிகழ்வு தான் உடன்கட்டை ஏறுதல். இது சனாதன தர்மத்தில் இல்லை என உடன்கட்டை ஏறுதலுக்கு புதிய விளக்கம் அளித்துள்ளார்.