12 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிநிலைநாட்டப்பட்டிருப்பது, நீதித் துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பாஜக கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்தார்.

மேலும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது, பொதுவாழ்க்கையில் இருக்கும் அனைவருக்கும் இது ஒரு பாடமாக அமைந்துள்ளது. திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை, திமுக  கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யாத வேறொரு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.