தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் மழை வெள்ளத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஞானமுத்து என்ற இளைஞர், அவரது தாயார் மற்றும் ஐந்து வயது குழந்தை உள்ளிட்ட நான்கு பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் இரண்டு பேர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.